மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர் சாவு

மானூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் இறந்தார்.

Update: 2021-03-02 21:21 GMT
மானூர், மார்ச்:
கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி( வயது 65). இவர் தனக்கு மாத்திரைகள் வாங்க அரசு ஆஸ்பத்திரிக்கு பேரன் மகேந்திரனின் (20) மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் பேரனுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மானூர் வடபுறம் மொபட் ஷோரூம் அருகே வந்தபோது திடீரென ஒரு ஆடு குறுக்கே வந்துள்ளது. ஆட்டின் மீது மோதாமல் இருக்க மகேந்திரன் திடீரென மோட்டார் சைக்கிளின் பிரேக்கை அழுத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறிய குழந்தைசாமி ரோட்டில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்ேகாட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தாா். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்