விஷம் குடித்து பெண் தற்கொலை

ஆலங்குளம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-03 21:13 GMT
ஆலங்குளம், மார்ச்:
ஆலங்குளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகவள்ளி (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கற்பகவள்ளி நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கற்பகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்