குளித்தலை
குளித்தலை பேராளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மகள் மீனாட்சி (வயது 15). இவர் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். சம்பவத்தன்று மீனாட்சி தனது பாட்டி வீட்டில் தூங்க செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் தாய் செல்வி அங்கு சென்று பார்த்தபோது அங்கு மீனாட்சி இல்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் மீனாட்சி கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்வி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.