பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-04 19:26 GMT
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் பணம் வைத்து சூதாடிய ஒச்சதேவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் செய்திகள்