குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-03-04 20:44 GMT
கருங்கல்:
கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோழிப்போர்விளையை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது குளச்சல், கருங்கல், தக்கலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கருங்கல் போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தினர்.. போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனின் பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார். கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்