சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை - கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-03-04 20:56 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திப்பாளம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த 2.2.2017 அன்று ஓசூர் தொரப்பள்ளி திப்பாளம் பகுதியைச் சேர்ந்த நவீன் (21) என்பவர், இந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரித்து நவீனை கைது செய்தார். அவர் மீது கடத்தல், பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நவீனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சு, மணி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்