ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,
ஓசூர் கிருஷ்ணப்பா காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த சீனிவாசன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.