21 பேர் குணமடைந்தனர்

21 பேர் குணமடைந்தனர்

Update: 2021-03-05 16:54 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 85 ஆக உள்ளது. 130 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்