பொக்லைன் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது

பொக்லைன் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-05 18:30 GMT
கரூர்
நாமக்கல் மாவட்டம் ஆத்தூர் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து செந்தில்ராஜா தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பொக்லைன் எந்திரத்தை திருடியது கரூர் மாவட்டம், வீரசிங்கம் பட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்