வாலிபர் கைது

வாலிபர் கைது

Update: 2021-03-05 18:42 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள தாரையூரணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரது மனைவி நாகநந்தினி(25). மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதுகுறித்து நாகநந்தினி கேட்டபோது மணிகண்டன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்