அரவக்குறிச்சி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலி

அரவக்குறிச்சி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2021-03-05 18:57 GMT
அரவக்குறிச்சி
லாரி கவிழ்ந்தது
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ரபீக் (வயது 55). இவர் கர்நாடக மாநிலம் ஹுப்லியிலிருந்து ஒரு லாரியில் கரூர் மாவட்டம் வழியாக மதுரைக்கு சுண்டல் கடலை மூட்டைகளை ஏற்றிச் சென்றார்.  அந்த லாரி நேற்று காலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடாகோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. 
டிரைவர் பலி
 இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய ரபீக் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த ரபீக்கை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்