வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை-பணம் திருட்டு

Update: 2021-03-05 19:24 GMT
பொன்னமராவதி
 பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு கொள்ளுப்பட்டியில் வசித்து வருபவர் பிச்சை (வயது 43). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மகள் பள்ளிக்கு சென்றிருந்தார். பின்னர் பள்ளி முடிந்து பிச்சையின் மகள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.  உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் பிச்சை புகார் அளித்தார். அதன்பேரில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்