சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு

சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு

Update: 2021-03-05 19:37 GMT
விராலிமலை
விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று இரவு வேலை முடிந்து திருச்சியில் இருந்து விராலிமலைக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அவர், அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது அதனை ஓட்டிச் சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்