கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள நிம்பநேஸ்வரம் கொல்லம் குண்டுகரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 2 பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள், மைக் செட் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைபோலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவரங்குளம் அருகே உள்ள நிம்பநேஸ்வரம் கொல்லம் குண்டுகரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 2 பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள், மைக் செட் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைபோலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.