சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

Update: 2021-03-05 19:54 GMT
கறம்பக்குடி
கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி ராட்டினாகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பணம் மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் கடைவீதி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற திருமேனி (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.31 ஆயிரத்து 780 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்