கோவில்பட்டியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து கோவில்பட்டியில் அனைத்திந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மாநில அனைத்தித்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.