பொதுசொத்துக்கள் சேதம் கிராமமக்கள் சாலை மறியல் சின்னசேலம் அருகே பரபரப்பு

பொதுசொத்துக்கள் சேதம் கிராமமக்கள் சாலை மறியல் சின்னசேலம் அருகே பரபரப்பு

Update: 2021-03-06 17:55 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் இரவு நேரத்தில் மர்மநபர்கள் குடிநீர்தொட்டி மற்றும் குழாய், குப்பை தொட்டி, சிமெண்டு பெஞ்ச் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதை கண்டித்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி தொட்டியம் கிராமமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சின்னசேலம்-கச்சிராயப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினை தொடர்பாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராமமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து சின்னசேலம் வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கராஜன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்