இலவச சிறப்பு மருத்துவ முகாம்

தேவகோட்டையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2021-03-06 18:20 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை ஆனந்தா கலைக்கல்லூரியில் சிவகங்கை மறைமாவட்ட பெண்கள் பணிக்குழு, நலவாழ்வுப் பணிக்குழு மற்றும் ஆனந்தா கல்லூரி சமூகப்பணித்துறை, விரிவாக்கத்துறை இணைந்து அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது. இதற்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ்கிறிஸ்டி தலைமை தாங்கினார்.
 கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் வரவேற்று பேசினார். தமிழக ஆயர்கள் பேரவையின் நலவாழ்வுப்பணிக்குழுவின் தலைவர், தக்கலை மறை மாவட்டத்தின் ஆயர் டாக்டர் ஜார்ஜ் ராஜேந்திரன், சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகி பேரருள் தந்தை பாக்கியநாதன் ஆகியோர் பேசினார்கள். முகாமில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 1,120 பேருக்கு இலவச சிகிச்ைச அளிக்கப்பட்டது. முடிவில் சிவகங்கை நலவாழ்வு பணிக்குழு மற்றும் பெண்கள் பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை ஆரோக்கியராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை ஆனந்தா கல்லூரி சமூகப்பணித்துறை தலைவர் டென்சிங்ராஜன், விரிவாக்கத்துறை தலைவர் விக்டர் பெனவெண்ட் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
---------

மேலும் செய்திகள்