மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அம்பையில் மாதர் சங்கத்தினர் ஆ்ர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-03-06 21:04 GMT
அம்பை, மார்ச்:
காவல் துறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கைது செய்யக்கோரி அம்பையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்யாணி திரையரங்கு அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் மார்கிரேட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கற்பகம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், கட்டுமான தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், பீடி தொழிலாளர்கள் சங்க செயலாளர் சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்