தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-03-06 21:15 GMT
இட்டமொழி, மார்ச்:
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அறிவுரைப்படி, முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில், தேர்தல் அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது. முகாமில் நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், டாக்டர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான்ஜெயச்சந்திரன், சமுதாய நல செவிலியர் ரேவதி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்