சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வடுக ைபரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.