கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்

எஸ்.புதூர் ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-03-07 18:29 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.புதூர் ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செயல்பாடுகள், உறுப்பினர்கள் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் திறம்பட செயல்பட்டு கட்சியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டுமென ப.சிதம்பரம் கூறினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வட்டார தலைவர் தேனன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் கட்டுகுடிபட்டி பொறுப்பாளர் தவசீலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்