போலீஸ் வாகன சோதனையில் 13 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

போலீஸ் வாகன சோதனையில் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-07 22:42 GMT

ஆவடி,

ஆவடியை அடுத்த கவரபாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சி.டி.எச். சாலையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அண்ணனூரை சேர்ந்த கோகுல் என்ற கோகுலகிருஷ்ணன் (வயது 46), ஆவடியை சேர்ந்த ராஜேஷ் (25), குமரவேலு (25) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் செய்திகள்