கோவை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவை மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பாதிப்பு 50-ஐ கடந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 55 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.