திருக்கோவிலூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு

திருக்கோவிலூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு

Update: 2021-03-08 16:18 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது 35). இவர் குடும்பத்துடன் செங்கணான் கொள்ளை கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்த நிலையில் சம்பவத்தன்று பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய்காந்தியின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடினார்கள். அப்போது செங்கணான்கொல்லை கிராமம் ஏரிக்கரை அருகில் மோட்டார் சைக்கிளுடன் சஞ்சய் காந்தி இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் சஞ்சய் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய்காந்தி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்