வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு

வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-03-08 19:47 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளுக்குகான வாக்குப்பதிவு எந்திரங்கள் பி.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை ராஜபாளையம் தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாண குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரி பார்த்து எந்திரங்களுக்கு சீல் வைத்தனர். இந்த அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்