ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-08 19:47 GMT
பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை சேரன்மாதேவி ரோட்டில் மணியாச்சி தாசில்தார் பாஸ்கரன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் அவர், மோட்டார் சைக்கிளில் 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 40 கிலோ துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40) என்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவரை தாசில்தார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து, ரேஷன் அரிசி, பருப்பு மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்