தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கொடைக்கானலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-09 16:59 GMT
கொடைக்கானல்:

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 25). இவருக்கும் கொடைக்கானலை சேர்ந்த தீபா (20) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் அவர்கள் 2 பேரும் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

பிரதீப்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. 

இதன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பிரதீப்குமார் நேற்று முன்தினம் இரவு, ஏரிச்சாலை அருகே தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரதீப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தீபா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். 

இதற்கிடையே பிரதீப்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்