வாசுதேவநல்லூரில் ஆம்னி பஸ் மோதி விவசாயி பலி

வாசுதேவநல்லூரில் ஆம்னி பஸ் மோதி விவசாயி பலியானார்.

Update: 2021-03-09 21:04 GMT
வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 50). விவசாயியான இவர் சம்பவத்தன்று மொபட்டில் வாசுதேவநல்லூர் பஜாருக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தென்காசி- மதுரை ரோட்டில் சென்று சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆம்னி பஸ் வந்தது. 

கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ், மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட பால்சாமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்சாமி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் வீரசிகாமணி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சேக் மதார் மைதீன் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்