கடையம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கடையம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-10 20:10 GMT
கடையம்:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நேரு நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜ் (வயது 22). கூலி தொழிலாளியான இவர் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கடையம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்