அய்யர்மலையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

Update: 2021-03-11 18:24 GMT
குளித்தலை
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அய்யர்மலை பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. இதில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்க மாணவர்கள், அனைத்து துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பெரியசாமி, புவனேஸ்வரி, செஞ்சிலுவை சங்க அலுவலர் பத்மபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்