வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2021-03-12 18:55 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே கரைப்பாளையம் ஆலமரத்துமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). இவருடைய வீட்டிற்குள் நேற்று நாகபாம்பு ஒன்று புகுந்து படம் எடுத்து ஆடியது. இதைக்கண்டு வெளியே ஓடி வந்த குணசேகரன் அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை விரட்டினார்.  ஆனால் நாகபாம்பு அறையை விட்டு வெளியேறவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்