நெல்லையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-03-12 19:42 GMT
நெல்லை:

நெல்லை பழைய பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் சிவசுப்பு (வயது 44). விவசாயி. இவருக்கு சொந்தமான வயல் கொம்பந்தனூரில் உள்ளது. இவர் வயல் அருகே பர்கிட் மாநகரை சேர்ந்த முத்துக்குமார் (40) என்பவருடைய வயலும் உள்ளது. 

சிவசுப்பு நெல் அறுவடைக்காக எந்திரத்தை கொண்டு வந்தார். அப்போது முத்துக்குமார் தனது வயல் வழியாக அறுவடை எந்திரத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் சிவசுப்புவை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த சிவசுப்பு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்