கடையம் அருகே வடமாநில வாலிபர் திடீர் சாவு

கடையம் அருகே வடமாநில வாலிபர் திடீரென்று இறந்தார்.

Update: 2021-03-13 19:48 GMT
கடையம்:

கடையம் அருகே பிள்ளைகுளத்தில் உள்ள செங்கல்சூளை வேலைக்காக வெளிமாநிலத்தில் இருந்து சிலர் வந்துள்ளனர். அவர்களில் ஜார்கண்டை சேர்ந்த பஹாடியா (வயது 18) மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நேபால் சர்தார் (21) என்பவரும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். 

உடனே இருவரையும் ஆட்டோவில் ஏற்றி கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது பஹாடியா வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. நேபால் சர்தார் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்