காரில் எரிசாராயம் கடத்தல்

காரில் எரிசாராயம் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-17 19:33 GMT
திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள சென்னை புறவழிச்சாலையில் தனியார் ஓட்டல் எதிரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக விஜிலன்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த காரில் 175 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்,டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் ஏரி கோடி தெருவை சேர்ந்த ராஜா என்கிற மருவூர் ராஜா (வயது 38) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்