லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.80 ஆயிரம் பறிமுதல்

வேப்பந்தட்டை அருகே லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.80 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-18 19:59 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கனிமவளத் துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த மினி லாரி ஒன்றை மறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த லாரியின் டிரைவர் ரூ.80 ஆயிரத்து 100 எடுத்து வந்தது தெரியவந்தது. இது பற்றி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி மகன் வெங்கட அரிகிருஷ்ணன் (வயது 25) என்தும், அவரிடம் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பணம் பெரம்பலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்