மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-03-18 20:11 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விவசாயியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
7 ஆண்டு சிறை தண்டனை
இந்த தீர்ப்பில் பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த சிறுமியின் தந்தைக்கு 2 பிரிவுகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். அதன்படி, அவர் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்