வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-03-20 21:40 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
சாமி தரிசனம் 
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்பட  16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
சிறப்பு வழிபாட்டில் ஆலங்குளம், பாரதிநகர், அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சிறப்பு பூஜை 
இதேபோல் கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
இதில் .கல்லமநாயக்கர் பட்டி, மாதாங்கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், உப்புபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்