நாமக்கல் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
நாமக்கல் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள பொம்மசமுத்திரம் பகுதியில் நேற்று பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது லாரியில் ஏரி மண்ணை அள்ளி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.