முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-22 15:14 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் முபாரக் (வயது 34). இவர் சென்னையில் ெசருப்பு கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆசியா (31) காயாமொழியில் வசித்து வருகிறார். இவரது மாமா சுலைமான் (72) கடந்த 20-ந் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் எழுந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர், காயாமொழி பள்ளிவாசல் தென்புறம் உள்ள இரும்பு கேட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருமகள் ஆசியா திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்