கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு
சங்கராபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி,
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) பாண்டியராஜன், துணைத்தலைவர் பிரதீப், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப்அருள்ராஜ், வட்டார வளர்ச்சி பொன்னுச்சாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.