திண்டிவனத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

திண்டிவனத்தில் பெண்ணிடம் நகை யை மா்ம மனிதா்கள் பறித்து சென்றனா்.

Update: 2021-03-23 17:15 GMT
திண்டிவனம், 
விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி லட்சுமி (வயது 36).  இவர் தனியார் டிரைவிங் ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து லட்சுமி தனது மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4¼ பவுன் தாலிசரடை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்