கந்தர்வகோட்டை, மார்ச்.25-
கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் மணிமாறன் (வயது 26). நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் குடிகாடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் மணிமாறன் (வயது 26). நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் குடிகாடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.