தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

Update: 2021-03-25 18:55 GMT
நல்லம்பள்ளி:
நாக்பூரில் இருந்து கோவைக்கு பஞ்சு பேல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தது. லாரியை திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 43) ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாய் அருகே வந்த போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் விபத்தில் சிக்கி தவித்த லாரி டிரைவர் திருமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்