பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2021-03-25 21:23 GMT
அன்னவாசல்
இலுப்பூர் கண்ணாரத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாணிக்கத்தம்மாள் (வயது 78). ஓய்வு பெற்ற சத்துணவு உதவியாளரான இவர் தனது குடும்பத்தினருடன் இலுப்பூரில் உள்ள தரம் தூக்கி பிடாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அனைவரும் கோவிலுக்கு உள்ளே சென்றதும் மாணிக்கத்தம்மாள் மட்டும் பின்புற கதவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் மாணிக்கத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்