தியாகதுருகம் அருகே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது

தியாகதுருகம் அருகே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது

Update: 2021-03-26 17:46 GMT
கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(வயது 42). இவர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீரசோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் இந்த பட்டறையில் புகுந்து 22 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றபோது அந்த கடையில் தங்கி இருந்த ஊழியர்கள் மர்மநபரை மடக்கி பிடித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் பாலு(வயது 32) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு பாலுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 22 கிலோ இரும்பு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்