முககவசம் அணியாத 8 பேருக்கு அபராதம்

எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-27 17:51 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் தலைமையில் ஊழியர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.  அப்போது ஆட்டு சந்தை, பஸ் நிலையம் பகுதிகளில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த 8 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1,600 அபராதம் விதித்தனர். 

மேலும் செய்திகள்