வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2021-03-27 19:55 GMT
சிவகாசி, 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் உள்ள ஆவினில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் நேர்மையாக வாக்களிக்க வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டது. ஆவின் பணியாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் விழிப்புணர்வு கோலங்களை வரைந்து இருந்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கண்ணன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், விற்பனை மேலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்