பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது

Update: 2021-03-28 20:51 GMT
விராலிமலை
விராலிமலை பெரியார் நகரைச் சேர்ந்த கென்னடி மனைவி கலைமதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு சந்தைப்பேட்டையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கலைமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து விராலிமலை போலீசில் கலைமதி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்