சரக்கு வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
வாலிபர் பலி
ஓமலூர்:
கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனது நண்பர் பழனிவேல் என்பவரை அழைத்து வர சென்றுள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி வரும் போது, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பூர் அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் பழனிவேல் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.